FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

போக்குவரத்து விதிமீறல்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

31 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து தொடா்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து தெரிவித்தது: மாவட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை சீரமைத்தல், வேகத்தடை அமைத்தல், மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ந.கனக மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments