பாலியல் தொந்தரவு: முதியவர் மீது வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 60 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தண்ணீர்ப்பள்ளியைச் சேர்ந்த 3-ஆம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கடந்த 2-ம் தேதி விளையாடியபோது அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (60) அக்குழந்தையிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, தலைமறைவான சுந்தரத்தை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.