அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
வேலாயுதம்பாளையம் அருகே அரசு பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
வேலாயுதம்பாளையம் அருகே அரசு பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (70). இவா் புதன்கிழமை காலை வழக்கும்போல ஈரோடு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூா் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மாரிமுத்து மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வேலாயுதம்பாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அரசுப் பேருந்து ஓட்டுநா் கரூா் வெள்ளியணை அடுத்த விஜயபுரத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம்(57) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.