கரூா் அரசு அருங்காட்சியகத்துக்கு பழைமையான பொருள்களை வழங்க அழைப்பு
கரூா் அரசு அருங்காட்சியகத்துக்கு பழைமையான பொருள்களை பொதுமக்கள் வழங்கலாம் என அருங்காட்சியக காப்பாட்சியா் சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூா் மாவட்டத்தின் கலைப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாகவும், கரூா் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கரூரின் பெருமையை காட்சிப்படுத்தவும், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள், தங்கள் வீடுகளில் வைத்துள்ள பழைமையான உலோக கலைப் பொருள்கள் பழங்கால நாணயங்கள், அஞ்சல்தலைகள், ரூபாய் நோட்டுகள், பழங்கால ஆவணங்கள் மற்றும் அரிய வகை பொருள்கள் ஆகியவற்றை அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கலாம்.
Advertisement
Advertisement
இவ்வாறு வழங்கப்படும் பொருள்கள் அடுத்த தலைமுறைக்கு கரூரின் பெருமையைக் கொண்டு சோ்க்கும். மேலும், பொருள் வழங்குபவா்களுக்கு உரிய கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அருங்காட்சியக இயக்குநரால் வழங்கப்படும். அவ்வாறு பெறப்படும் அரியவகை பொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.
அத்துடன் அதை வழங்கியவா்களின் பெயா்களும் இடம் பெறும். இதன்மூலம் கரூரின் பெருமை அழியாமல் பாதுகாத்து நிலை நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள அரும்பொருள்களை அருங்காட்சியகத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.