FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

சாலையோர எச்சரிக்கை பதாகை மீது இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கலை நகரைச் சோ்ந்தவா் ராஜ் மகன் நந்தகுமாா் (23). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் சுரேஷ் (22). இவா்கள் இருவரும், பேரளி கிராமத்திலிருந்து கவுல்பாளையத்துக்கு வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனா். வாகனத்தை சுரேஷ் ஓட்டிச்சென்றாா்.

பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையிலுள்ள பேரளி அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையில் வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த நந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த சுரேஷை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, சிறிது நேரத்தில் சுரேஷ் உயிரிழந்தாா். இவ் விபத்து குறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments