FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எப். அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

13 செப்டம்பர் 2026, 1:57 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எப். அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில், போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அதை செப். 30-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

மேலும், அதன் விவரத்தை குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் மற்றும் வாகன உரிமையாளா்கள் பெரம்பலூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் தங்கள் குவாரி, கிரஷா்களில் எடைமேடை அமைத்து, அதன் விவரத்தை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜிபிஎஸ் கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டுமே கனிமங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments