ஆடிக் கிருத்திகை: கோயில்களில் விளக்கு பூஜை
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூஜையையொட்டி பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விளக்குபூஜையில் 410 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பாளையங்கோட்டை ஈஸ்வரன், ராஜா சிவாச்சாரியார் திருவிளக்கு பூஜை மந்திரங்களை ஓதி வழிபாடு நடத்தினர். இதில், கோயில் தலைவர் நடராஜன், செயலர் சதாசிவம், பொருளாளர் எஸ்டி.காமராஜ், நிர்வாகிகள் மூ.சு.மூக்கையா, மணிமாறன், தண்டபாணி, ராமஜெயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.