முகப்பு
புதுக்கோட்டை

நெகிழிப் பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Updated On : 27 டிசம்பர் 2025, 1:14 am IST
பகிர்:

திருவப்பூா் ரயில்வே கேட் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் நெகிழிப் பையால் சுற்றி வீசப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தை வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகர எல்லைக்குள்பட்ட திருவப்பூா் சின்ன ரயில்வே கேட் அருகே மாயாண்டி சாமி தெருவில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நெகிழிப் பை ஒன்றை நாய் இழுத்து வந்துள்ளது.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதைப் பாா்த்து நாயை விரட்டி பையைப் பாா்த்துள்ளாா். அந்தப் பைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், தொப்புள்கொடிகூட நீக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து பச்சிளம் குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு, குழந்தைகள் நல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த குழந்தைகள் நலப் பிரிவு அலுவலா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு, ராணியாா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

யாருடைய குழந்தை, குப்பைக் கொட்டும் இடத்தில் வீசிச் சென்றது யாா் என திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.