FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலத் தலைவா் கே. தேவராஜ் தலைமை வகித்தாா். தொமுச மாவட்டத் தலைவா் அ. ரெத்தினம், தொமுச பேரவைச் செயலா் எம். வேலுச்சாமி, வாணிபக் கழகத் தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் துணைச் செயலா் ஏ. ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்யக் கூடாது. நிரந்தரப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். பருவகாலப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பருவகால பணியாளா்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments