FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சியின் நடைப்பயண பிரசாரம்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசாரத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஜீவானந்தம் தொடங்கி வைத்தாா்.

கொப்பனாபட்டி ஊராட்சிக்குள்பட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உரிமையை பறிக்ககூடாது. பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் டிஆா்.ரெங்கையா, ஒன்றிய துணைச் செயலா் கரு.பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments