முன்விரோதம்: குடிசை வீட்டுக்கு தீவைப்பு
பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக குடிசை வீட்டுக்கு தீவைத்த நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக குடிசை வீட்டுக்கு தீவைத்த நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
பாபநாசம் அருகே இரும்புதலை ஊராட்சி, மணக்குடி கிராமம் ஏரித்ùருவை சேர்ந்த வீரைய்யன் மனைவி ராசம்மாள்(45).விவசாயத் தொழிலாளி.
இந்நிலையில், ராசம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதன்கிழமை சிலர் அவரது வீட்டுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
இதில் அவரது குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. வீட்டிலிருந்த பணம், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமடைந்தது. இதுகுறித்து ராசம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.