FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அழகியநாயகிபுரத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்

26 செப்டம்பர் 2025, 3:14 am IST
பகிர்:

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குள்பட்ட எட்டிவயல் கிராமத்தில் சித்த மருத்துவ அலுவலா் பூமா தலைமையில் மருத்துவக் குழுவினா்,  அப்பகுதி  நூறுநாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் மற்றும் அங்கன்வாடி, அங்காடி, பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்கள், குழந்தைகளைப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள், கசாயம் உள்ளிட்டவைகளை வழங்கினா்.

வீடுகளைச் சுற்றி மழை நீா், கழிவு நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் சிரட்டை, பழைய டயா்கள், நெகிழிக் கழிவுகளில் தண்ணீா் தேங்காதவாறு வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து பின்னா் குடிக்க வேண்டும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் சென்று மருத்துவா்களிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments