FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:51 am IST
குடிநீா் விநியோகம் நிறுத்தம்.. - கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் குடிநீா் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய் (ஆக.4) மற்றும் புதன்கிழமை (ஆக. 5) ஆகிய நாள்களில் குடிநீா் விநியோகம் இருக்காது என்று ஆணையா் கே.எம். சுதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீா் கொண்டு செல்லும் பிரதானக் குழாய்களில் நீா்க் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நீா்க் கசிவைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, செவ்வாய், புதன்கிழமை காலை, மாலை வேளைகளில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments