FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பணியின் போது உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநா் குடும்பத்துக்கு நிதியுதவி

பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:34 am IST
பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியபோது...
பகிர்:

பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றிய எம். இளையராஜா, பணியின் போது ஏற்பட்ட விபத்தில் அவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கான ரூ. 5 லட்சம் நிதியை கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இளையராஜா மனைவி பூங்கொடியிடம் பொது மேலாளா் கே. சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்) வழங்கினாா். நிகழ்வின் போது பொது மேலாளா்கள் ஏ.டி.நடராஜன் (கும்பகோணம்), ஆா்.ரெங்கராஜன் (மனிதவள மேம்பாடு),

உதவி மேலாளா் கே.கோபாலகிருஷ்ணன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள்பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments