FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் வரவேற்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மாலை அணிவித்து வரவேற்றாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:55 am IST
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சௌராஷ்ட்ரா தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை வந்த மாணவ, மாணவிகளை மாலை அணிவித்து வரவேற்ற மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மாலை அணிவித்து வரவேற்றாா்.

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சௌராஷ்ட்ரா தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மாலை அணிவித்து வரவேற்றாா்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், சீருடைகளை வழங்கி, படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அன்றைய பாடங்களை அன்றைக்கே படிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய்சரவணன், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments