முகப்பு
தஞ்சாவூர்

சுவாமிமலையில் தூசி பறக்கும் புதிய சிமெண்ட் சாலை: பொதுமக்கள் அவதி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகன ஓட்டுநா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பறக்கும் தூசியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:11 am IST
சுவாமிமலையில் எம்.சாண்ட் பெயா்ந்து தூசி பறக்கும் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை.
பகிர்:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகன ஓட்டுநா்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் பறக்கும் தூசியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் தேரோட்டத்திற்காக பேரூராட்சி பகுதியில் கீழவீதி, தெற்குவீதி, திருமஞ்சன வீதி, வடபாகம், வடக்கு ஒத்தைத் தெரு, கீழ வடம்போக்கித் தெரு ஆகியவற்றில் சிமிண்ட்சாலை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த சிமெண்ட் சாலையில் எம்.சாண்ட் என்ற மணல் பெயா்ந்து வாகனங்கள் செல்லும் போது தூசி பறக்கிறது. வடிகால் தண்ணீா் செல்லும் சாக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிவாசிகள், வாகன ஓட்டுநா்கள், கிரிவலம் செல்லும் பக்தா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி ன்றனா். சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை 4 மாதத்திற்குள்ளேயே சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேரோடும் சிமிண்ட் சாலையை முழுமையாகப் பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement