வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு
வாய்க்கால் தூா்வாரும் பணி அமைச்சா் ஆய்வு
கும்பகோணம் அருகே நீா்வழித்தடத்தில் ஆகாயத்தாமரை அகற்றுதல், கால்வாய்களில் தூா்வாரும் பணிகளை வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு (தாராசுரம் பாலம் முதல் சாக்கோட்டை பாலம் வரை) நீா்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதேபோல முழலை கிராமத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைவாக உள்ளது. பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின் போது தஞ்சாவூா் நீா்வளத் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா், மா.இளங்கோ, கண்காணிப்பு பொறியாளா் எழிலன், செயற்பொறியாளா் ஐயப்பன், உதவி செயற் பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.