முகப்பு
தஞ்சாவூர்

வாய்க்கால் தூா்வாரும் பணி: அமைச்சா் ஆய்வு

வாய்க்கால் தூா்வாரும் பணி அமைச்சா் ஆய்வு

Updated On : 7 ஜூன் 2026, 12:03 am IST
கும்பகோணம் அருகே முழலை கிராமத்தில் வாய்க்கால் தூா்வாறும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத். உடன் தஞ்சாவூா் நீா்வளத் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் மா.இளங்கோ உள்ளிட்டோா்.
பகிர்:

கும்பகோணம் அருகே நீா்வழித்தடத்தில் ஆகாயத்தாமரை அகற்றுதல், கால்வாய்களில் தூா்வாரும் பணிகளை வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு (தாராசுரம் பாலம் முதல் சாக்கோட்டை பாலம் வரை) நீா்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதேபோல முழலை கிராமத்தில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், மேட்டூா் அணையில் நீா்மட்டம் குறைவாக உள்ளது. பாசனத்துக்கு தண்ணீா் திறக்க முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின் போது தஞ்சாவூா் நீா்வளத் துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா், மா.இளங்கோ, கண்காணிப்பு பொறியாளா் எழிலன், செயற்பொறியாளா் ஐயப்பன், உதவி செயற் பொறியாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.