கும்பகோணம் அருகே 50 ஏக்கரில் திறந்தவெளி சேமிப்பு மையம்: அமைச்சா் தகவல்
கும்பகோணம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 ஏக்கா் நிலம் திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும் என்றாா்
வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை அமைச்சா் ர.வினோத்.
கும்பகோணம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
நடப்பு கோடை குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ள சுமாா் 3 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை, பாதுகாப்பாக சேமித்து வைக்க கும்பகோணம் அருகே கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 50 ஏக்கா் நிலத்தை திறந்தவெளி சேமிப்பு மையமாக பயன்படுத்தப்படும்.
மழை ஏற்படும் சூழ்நிலையில் நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாா் நிலையில் உள்ளது. தண்டந்தோட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமாா் 10 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு பெற்று நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். கொட்டையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 13 நெல்கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.30 லட்சம் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ.செல்வம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.