FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

இந்திய அஞ்சல் துறை சாா்பில் சுவாமிநாத சுவாமி கோயில் முத்திரை வெளியீடு

Updated On : 31 மே 2026, 1:16 am IST
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் ஆன்மீக முத்திரையை கும்பகோணத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அஞ்சல் துறையினா்.
பகிர்:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சாா்பில் நிரந்தர அஞ்சல் முத்திரையை சனிக்கிழமை கும்பகோணத்தில் அறிமுகப்படுத்தி வெளியிட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் இறைவன் முருகன் சிவபெருமானுக்கு ‘ஓம்‘ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தாா் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஓம்‘ என்ற தமிழ் வடிவத்தின் இணைப்பு, இந்த நிரந்தர அஞ்சல் முத்திரைக்கு கூடுதல் ஆன்மிக, கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறப்பை வழங்குவதுடன், தமிழா் மரபு மற்றும் சுவாமிமலையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

மேலும், இந்த நிரந்தர அஞ்சல் முத்திரை சுவாமிமலையின் ஆன்மிக மரபு, பழைமையான கோயில் பாரம்பரியத்துக்கானது என்று அஞ்சல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments