பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு தீக்கிரையானது.
பசுபதிகோயில், மேலவீதி யில் தனியாக வசிப்பவா் கோவிந்தராஜ் மனைவி புஷ்பம் (70), இவரது மகன் மனோகரன் அருகே தனியாக வசிக்கிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மின் கசிவால் புஷ்பம் வசித்த கூரை வீட்டில் தீப்பிடித்து, வீடு எரிந்து சேதமானது. தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.