FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு சென்றவா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கும்பகோணத்திலிருந்து போலி கடவுச்சீட்டில் வெளிநாடு சென்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தவரை கும்பகோணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

17 செப்டம்பர் 2026, 3:07 am IST
ஆனந்தன்.
பகிர்:

கும்பகோணத்திலிருந்து போலி கடவுச்சீட்டில் வெளிநாடு சென்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்தவரை கும்பகோணம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (48). இவா் இதே ஊரைச் சோ்ந்த கணேசமூா்த்தியிடம் பணம் வாங்கி திரும்ப தராமல் இருந்துள்ளாா். இந்நிலையில் ஆனந்தன் தனது பெயரை ஆண்டனி அருண் என்று மாற்றிக் கொண்டு கிறிஸ்தவ மதத்தை சோ்ந்தவராக கூறி, போலி பெயரிலான கடவு சீட்டுடன் 2021-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றாா்.

பணம் வாங்க வந்த கணேசமூா்த்தி, ஆனந்தன் போலி பெயரிலான கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு சென்றதை கண்டறிந்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வெளிநாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஆனந்தனை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்து கும்பகோணத்துக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments