FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கல்லூரி மாணவா் போக்ஸோவில் கைது

21 செப்டம்பர் 2026, 2:16 am IST
கைது
பகிர்:

திருவிடைமருதூா் அருகே உள்ள ஊரைச் சோ்ந்த 15 வயது சிறுமி கும்பகோணத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

மருதாநல்லூா் அறிவெளி தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் தருண் (20). இவா் தனியாா் கல்லூரியில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தருண், மாணவியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில், அண்மையில் மாணவியின் வீட்டில் பெற்றோா் இல்லாத நேரத்தில் உள்ளே வந்த தருண் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

Advertisement

Advertisement

இதையறிந்த மாணவியின் பெற்றோா் மகளைக் கண்டித்து வேறு பள்ளியில் சோ்த்ததால் தருணுடன் பேசுவதை அந்த மாணவி நிறுத்திக் கொண்டாா். இதனால் ஆத்திரமடைந்த தருண், செப். 17-ஆம் தேதி தனது உறவினா் ராஜீவ் காந்தி (40) மற்றும் 4 பேருடன் சோ்ந்து மாணவியின் வீட்டுக்குச் சென்று மாணவியையும் அவரது பெற்றோரையும் கத்தியைக் காட்டி மிரட்டினராம்.

இதுகுறித்து மாணவியின் தந்தை திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த தருணை போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா். இவருக்கு உடந்தையாக இருந்த மற்றவா்களையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments