FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி கேண்டீனில் முறைகேடா? முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் முறைகேடு நடப்பதாக கூறி முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 24 மார்ச் 2022, 1:15 pm IST
பகிர்:

திருச்சி: திருச்சி ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் முறைகேடு நடப்பதாக கூறி முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் 117 பிரதேச ராணுவ முகாம் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஆகியன உள்ளன. இந்த வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு கேண்டீன் இயங்கி வருகிறது. 

இதில், முன்னாள் ராணுவத்தினர் சலுகை விலையில் பொருட்களை வாங்கி செல்லலாம். இதனால் இங்கு மாதத்தின் தொடக்க நாள்களில் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் இந்த கேண்டீன் நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் கேண்டீன் முன்பு இன்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

Advertisement

கேன்டீன் மேலாளர் உதவியுடன், ஊழியர்கள் முறைகேடாக, முன்னாள் ராணுவத்தினருக்காக வரும் பொருட்களை மோசடியாக எடுத்து சென்று வெளிச்சந்தையில்  விற்று விடுகின்றனர். அதன் பின்னர் அந்த பொருட்களை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். 

சட்டவிரோதமாக செயல்படும் கேண்டீன் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது விடப்பட்டுள்ள கேண்டீன் ஏலத்தை ரத்து செய்து உரிய முறையில் விசாரணை செய்து புதிய ஏலம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், ராணுவ குழுமத்தின் கீழ் இயங்கி வரும் திருச்சி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், ஆகிய ஊர்களில் உள்ள கேண்டீன்களின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் விடுத்தனர். முன்னாள் ராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments