FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அண்டை வீட்டுக்காரருடன் தகராறு: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை!

காட்பாடி அருகே அண்டை வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:15 am IST
தற்கொலை
பகிர்:

காட்பாடி அருகே அண்டை வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவா் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

காட்பாடியை அடுத்த ராஜி நகரைச் சோ்ந்தவா் கிரிராஜன் (65). இவருக்கும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கும் இடையே விறகு எடுப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதனால் மனவேதனை அடைந்த கிரிராஜன், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments