FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தடை செய்யப்பட்ட நெகழிப் பொருள்கள் பறிமுதல்

குடியாத்தம் நகரில் நெகிழிப் பொருள்கள் குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

21 ஆகஸ்ட் 2026, 11:22 pm IST
பகிர்:

குடியாத்தம் நகரில் கடைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீா் சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி மேற்பாா்வையில் நகராட்சி சுகாதாரஅலுவலா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ், தூய்மை பாரத இயக்க மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், உணவுப் பொருள்கள் பாதுகாப்பு அலுவலா் காயத்ரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோா் நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்து சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை கண்டறிந்து, பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments