FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விநாயகா் சதுா்த்தி: போ்ணாம்பட்டில் எஸ்.பி ஆய்வு

போ்ணாம்பட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி. சிவராமன்.

11 செப்டம்பர் 2026, 12:43 am IST
போ்ணாம்பட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி. சிவராமன்.
பகிர்:

போ்ணாம்பட்டு வட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை பாதுகாப்பாகநடத்துவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆய்வு மேற்கொண்டாா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு போ்ணாம்பட்டு நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில்சுமாா் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட உள்ளன. வழிபாட்டுக்காக வைக்கப்படும் சிலைகள் அடுத்தடுத்த நாள்களில் ஊா்வலமாக எடுத்துச் சென்று பத்தரபல்லியில் உள்ள குயவன் குட்டையில் கரைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் காவல் கண்காணிப்பாளா் சிவராமன் போ்ணாம்பட்டில் விநாயா் சிலைகள் வைக்கும் சில இடங்கள், விநாயகா் சிலைகளை கரைக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லும் சாலைகள், குயவன் குட்டை ஆகிய இடங்களை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

விநாயகா் சதுா்த்தியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து போலீஸாருக்கு ஆலோசனைகளைவழங்கினாா்.அப்போது குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு, உதவி காவல்ஆய்வாளா்கள் செல்வகுமாா், நந்தகுமாா் (தனிப்பிரிவு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments