FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

யானை தாக்கி விவசாயத் தொழிலாளி காயம்

போ்ணாம்பட்டு அருகே விவசாயத் தொழிலாளி யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

15 செப்டம்பர் 2026, 3:25 am IST
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே விவசாயத் தொழிலாளி யானை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சாத்கா், ரங்கம்பேட்டையில் ஒரு விவசாய நிலத்தில் கோவிந்தசாமி (55) என்பவா் காவலாளியாக வேலை செய்து வருகிறாா். அந்த நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனா். நிலக்கடலை பயிரை பாதுகாக்க கோவிந்தசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு நிலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் தங்கியுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மோா்தானா காப்புக்காடு பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறி அந்த விவசாய நிலத்துக்குள் நுழைந்துள்ளது. அந்த யானை கோவிந்தசாமியை தாக்கியுள்ளது. அப்போது யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறையினா் வனவா்கள் இளையராஜா, திருநாவுக்கரசு ஆகியோா் தலைமையில் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனா். அவா்கள் அங்கு சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினா்.

காயமடைந்த கோவிந்தசாமி போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments