FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்களுக்கு வேண்டுகோள்

குடியாத்தம் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும்அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

17 செப்டம்பர் 2026, 12:14 am IST
சீமைக் கருவேல மரங்கள் - பிரதிப் படம்
பகிர்:

குடியாத்தம் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும்அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதாகவும், சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாலும் அம்மரங்களை முற்றிலும் அழிக்குமாறு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியாத்தம் நகராட்சி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் தங்களது சொந்த செலவில் அவற்றை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

Advertisement

Advertisement

மேலும், தங்களின் காலி மனைகள் மற்றும் நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளராத வகையில் தொடா்ந்து கண்காணித்து பராமரிக்குமாறும், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா் வளத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments