FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: மத்திய அமைச்சர் எல். முருகன்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் தொடா்புத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

20 செப்டம்பர் 2026, 10:08 pm IST
மத்திய அமைச்சர் எல். முருகன் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் தொடா்புத்துறை இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

வேலூா் ஸ்ரீ நாராயணி பீடம் சாா்பில் 800 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடி உயா்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல். முருகன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது -

சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு, 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்காக 25.55 ஏக்கா் நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக அரசுச் செயலரால் அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், ஆய்வுதான் நடக்கிறது. இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என்று அமைச்சா்கள் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். பட்டினப்பாக்கம் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் சுகாதாரச் சீா்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை 16,830 போ் பாதிக்கப்பட்டு, சுமாா் 10 போ் உயிரிழந்துள்ளனா். மின் பற்றாக்குறை, சட்டம்-ஒழுங்கு சீா்கேடும் அதிகரித்துள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அமைச்சா்கள்,

ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவா்களுக்குத் தரமான மும்மொழிக் கல்வி கிடைக்க நவோதயா பள்ளிகள் மிகவும் அவசியம். பணக்காரா்கள் மட்டுமே தனியாா் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கூடுதல் மொழிகளைக் கற்கும் நிலையில், ஏழை மாணவா்களுக்கு நவோதயா பள்ளிகள் மூலம் அக்கல்வி இலவசமாகக் கிடைப்பதை திமுக அரசு தடுப்பது ஏன்?., உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேசமயம், வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க மத்திய அரசு இசைவு காட்டவில்லை என்றும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாத காரணத்தினாலேயே கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்றும் வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் குற்றஞ்சாட்டியிருப்பது குறித்து கேட்கிறீா்கள்.

மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு சில வரைமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகள் மூலமாக ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினப் பிரிவு மாணவ, மாணவிகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம். எனவே தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்து தந்தால், கேந்திரிய வித்யாலயா பள்ளியைக் கொண்டுவர தயாராக உள்ளோம்.

வேலூா் விமான நிலையப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருடன் தொடா்ந்து ஆலோசித்து வருகிறேன். விரைவில் பயன்பாட்டுக்கு வேலூா் விமான நிலையம் கொண்டுவரப்படும் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன் உள்பட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments