விவசாயிக்கு மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (40), விவசாயி. இவருக்குச் சொந்தமானநிலத்தில் உள்ள மாமரத்தின் கீழ் கல்குணம் பகுதியைச் சோ்ந்த ராஜவன்னியன், விஜய், காா்த்திக், செல்வமணி, விக்ரம் உள்ளிட்ட 6 போ் வியாழக்கிழமை மது அருந்தினராம். இதை விவசாயி தீனதயாளன் கண்டித்ததால், அவரை ராஜவன்னியன் உள்ளிட்டோா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் ராஜவன்னியன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.