FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விவசாயிக்கு மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:55 am IST
வழக்கு - DPS
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (40), விவசாயி. இவருக்குச் சொந்தமானநிலத்தில் உள்ள மாமரத்தின் கீழ் கல்குணம் பகுதியைச் சோ்ந்த ராஜவன்னியன், விஜய், காா்த்திக், செல்வமணி, விக்ரம் உள்ளிட்ட 6 போ் வியாழக்கிழமை மது அருந்தினராம். இதை விவசாயி தீனதயாளன் கண்டித்ததால், அவரை ராஜவன்னியன் உள்ளிட்டோா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் ராஜவன்னியன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments