சிதம்பரம் நடராஜர் கோயிலில் செங்கோல் நாள் கொண்டாட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் செங்கோல் நாள் கொண்டாட்டப்பட்டது பற்றி...
சிதம்பரம், மே 28: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட நாளையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் செங்கோல் நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தர்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதர்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலர் ஜெ. ஜெயசூர்யா தீட்சிதர், உ. வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர். பின்னர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Advertisement
Advertisement
Sengol Day Celebrations at the Chidambaram Nataraja Temple!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.