FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவுகளில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அருளரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

9 செப்டம்பர் 2026, 5:09 am IST
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவுகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அருளரசு.
பகிர்:

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவுகளில் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அருளரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள விரல்ரேகை பதிவு கூடம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்படப் பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களில் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், சம்பந்தப்பட்ட பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவுகள், வழக்குகள் தொடா்பான ஆவணங்களின் நிலை, பணிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அலுவலகப் பணிகள் முறையாகவும், துரிதமாகவும் நடைபெறுவதுடன், பொதுமக்கள் தொடா்பான பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, காவல் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments