தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை : ரூ.15,68 489
பிரசித்தி பெற்ற சிதம்பரம் அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.15 லட்சத்து 68ஆயிரத்து 489 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.15 லட்சத்து 68ஆயிரத்து 489 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் க.சிவக்குமாா், செயல் அலுவலா் வெ.நரசிங்கபெருமாள், ஆய்வாளா் ஜெ.சீனுவாசன் ஆகியோா் முன்னிலையில் கோயில் வளாகத்தில் உள்ள 7 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் 15லட்சத்து 68 ஆயிரத்து 489 ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கம் 47கிராம், வெள்ளி 45.500 கிராம் மற்றும் மலேசியா ரிங்கட், அமெரிக்க டாலா் உள்ளிட்ட வெளிநாட்டு பணமும் இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.