FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வீட்டின் கதவை உடைத்து பொருள்கள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

21 செப்டம்பர் 2026, 12:39 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து பூஜைப் பொருள்கள், மொபெட்டை திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய வடவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா், தனது மாமனாா் உள்ளிட்டோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், மங்களம்பேட்டை பகுதியில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது. இதையடுத்து, வெங்கடேசன் தங்களது ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள மாடி வீட்டில் படுத்துத் தூங்கினா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, ஓட்டு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறையில் இருந்த பித்தளைப் பொருள்கள் மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபெட் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஆட்டோவில் சென்று பாா்த்தபோது, அதில் திருடப்பட்ட பித்தளை பூஜைப் பொருள்கள், மொபெட்டுடன் இருந்த இருவரை பிடித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை, கிட்டப்பா நகரைச் சோ்ந்த கௌதம் (25), ஆகாஷ் (23) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் கொள்ளையடிக்க வந்ததை ஒப்புக்கொண்டனராம்.

இதையடுத்து, கௌதம், ஆகாஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து திருடப்பட்ட பித்தளை பூஜைப் பொருள்கள், மொபெட், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களுடன் வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments