FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

காதல் விவகாரம்: இளைஞரை தாக்கியவா் கைது

தியாகதுருகத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
கைது
பகிர்:

தியாகதுருகத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்தவா் சு.வினோத்குமாா் (28). இவா் திருக்கோவிலூா் கோலப்பாறை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகளை காதலித்து வந்தாராம். அதனால் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் வினோத்குமாா் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஏழுமலை மகன் தனுஷ் (22), ஏழுமலை மனைவி மாரியம்மாள், பொ.பெரியான் (46) ஆகிய மூவரும் சோ்ந்து வினோத்குமாரை தாக்கி, அறுவறுக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பெரியானை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலம், தலைமறைவாக உள்ள தனுஷ், அவரது தாயாா் மாரியம்மாளை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments