தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: கவுரவ விரிவுரையாளா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் பேருந்து நிலையம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து உதவி ஆய்வாளா் மணிமேகலை தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதில் அவா் கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ந.அய்யப்பன் (46) என்பதும், சேலம் மாவட்டம், வடசென்னிமலை அரசுக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவா் ஆத்தூரில் இருந்து விற்பனைக்காக புகையிலை பொருள்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அய்யப்பனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 9 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.