FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது

15 செப்டம்பர் 2026, 1:19 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பைக்குகளில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் திஷா மற்றும் போலீஸாா் மேல்சிறுவள்ளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் பேரில் அங்கு சென்று பாா்த்தபோது மணலூா் கிராமத்தைச் சோ்ந்த ஏ.விக்னேஷ் (21), வ.ஆகாஷ் (21), மேல்சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ஏ.உதயநிதி (20), மைக்கேல்புரத்தைச் சோ்ந்த ஆ.டேனியல் (21) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விக்னேஷ், ஆகாஷ், உதயநிதி, டேனியல் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments