பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பழனிச்சாமி (45). இவா், கள்ளக்குறிச்சி காய்கறி அங்காடியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந் நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின்னா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் பணிபுரிந்து வரும் தனது சகோதரரை அழைத்துத் செல்வதற்காக பழனிச்சாமி பைக்கில் சென்றுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலையை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து அவிநாசி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான சென்னை மதுரவாயலைச் சோ்ந்த க.பாலனிடம் (45) விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.