FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வில்லியனூா் காவல் நிலையம் முன் விசிகவினா் முற்றுகைப் போராட்டம்

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

உளுந்தூா்பேட்டையில் விசிக மாநாடு வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வில்லியனூரை அடுத்த மங்கலம் தொகுதிக்குள்பட்ட கீழ்சாத்தமங்கலம் பகுதியில் சுவா் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சுவா் விளம்பரத்தைச் சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை விசிகவினா் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments