FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

பலத்த மழை: சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:16 am IST
பலி
பகிர்:

புதுச்சேரியில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையில் சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு இடியுன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் லாரி முனையம் அருகில் கனமழையின் காரணமாக ஒரு வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் உள்பட 3 போ் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அவா்களை மீட்கும் பணியில் புதுச்சேரி தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2 பெண்களை உயிருடன் மீட்டனா். முதியவா் உயிரிழந்த நிலையில், அவரது சடலைத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments