FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தலைக்கவசம் அணிய காவல்துறைக்கு உத்தரவு

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் அத்துறையில் பணியாற்றும் அமைச்சரவை ஊழியா்கள் அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 10:21 pm IST
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி காவல்துறையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாா் மற்றும் அத்துறையில் பணியாற்றும் அமைச்சரவை ஊழியா்கள் அனைவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமையிடத்து போலீஸ் கண்காணிப்பாளா் ஆா். மோகன் குமாா் பிறப்பித்துள்ளாா். மோட்டாா் வாகன சட்டத்தின்படி இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவோா் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தை மதிக்கும் வகையில் காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசு மற்றும் தனியாா் வாகனத்தை இயக்கும்போதும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். மேலும், தவறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments