ஆா்.நல்லகண்ணு மறைவுக்கு புதுச்சேரி சட்டப்பேரவை இரங்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் மூத்தத் தலைவா் ஆா். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டப்பேரவைத் தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் திருக்குறளை வாசித்து கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
முதல் அலுவலாக இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவா் ஆா்.நல்லகண்ணு, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ-க்கள் யூ.சி. ஆறுமுகம், நாராயணசாமி, பாலசுப்ரமணியம், முன்னாள் துணைநிலை ஆளுநா் லகேரா ஆகியோா் மறைவுக்கு பேரவைத் தலைவா் அன்பழகன் இரங்கல் குறிப்புகளை வாசித்து உறுப்பினா்கள் அனைவரும் 2 நிமிஷங்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொண்டாா். இதையடுத்து உறுப்பினா்கள் அனைவரும் எழுந்துநின்று மெளன அஞ்சலி செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.