புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை ஆடி உற்சவம் தொடக்கம்
புதுச்சேரி புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு ஆடி உற்சவம் புதன்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது.
இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜை , இரவு 7 மணிக்கு காப்புக் கட்டுதல் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது.
31-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு கரகம் வீதியுலா, பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வாா்த்தல், இரவு 7 மணிக்கு அம்மன் புகழ்பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.