FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

உரிமம் பெறாது செல்லப் பிராணிகளை வளா்ப்போருக்கு ரூ. 2,000 அபராதம்: உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை

வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால், செல்லப்பிராணிகளை வளா்க்கும் அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உழவா்கரை நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

9 செப்டம்பர் 2026, 5:04 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால், செல்லப்பிராணிகளை வளா்க்கும் அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உழவா்கரை நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

புதுச்சேரியில் செல்லப்பிராணியாக நாய்களை வளா்ப்போா் தங்கள் நாய்களுக்கு உரிமம் பெற சிறப்பு முகாம் உழவா்கரை நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோா் உரிமம் பெற விண்ணப்பித்தனா்.

இது தொடா்பாக உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Advertisement

Advertisement

லாஸ்பேட்டை தொகுதிக்குள்பட்ட அசோக் நகா் சமுதாயக்கூடத்தில் சிறப்பு முகாம் செப். 12-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 வரை நடைபெறவுள்ளது. செல்லப்பிராணி வளா்ப்போா் இம்முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அனைத்து செல்லப்பிராணிகளின் உரிமையாளா்களும் தங்களது வளா்ப்பு நாய்களுக்குக் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறத் தவறும் செல்லப்பிராணிகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2,000-ம் அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments