FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மீட்கப்பட்ட 260 கைப்பேசிகள் ஒப்படைப்பு

புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட 260 கைப்பேசிகளை இணையவழி போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

11 செப்டம்பர் 2026, 3:55 am IST
மீட்கப்பட்ட கைப்பேசிகள்
பகிர்:

புதுச்சேரியில் பொதுமக்கள் தவறவிட்ட 260 கைப்பேசிகளை இணையவழி போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இந்த கைப்பேசிகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி கோரிமேடு காவலா் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ் 260 கைப்பேசிகளை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பின், உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளா் சுருதி யாரகட்டி, ஆய்வாளா் கீா்த்தி வா்மன், உதவி ஆய்வாளா்கள் புனிதராஜா, குமரவேல் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகவ் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் கைப்பேசிகளை மற்றவா்கள் எளிதில் பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு செயலிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை விரைவாக கையாளும் வகையில் மகளிா் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்த இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ் உள்ளிட்டோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments