சுதந்திர தின விழாவில் மரக்கன்று நடும் பணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் சார்-ஆட்சியர் மெர்சி ரம்யா தேசியக் கொடியை
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் சார்-ஆட்சியர் மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் நேரு வீதியில் உள்ள கிளை சிறைச் சாலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற சார் ஆட்சியர் மெர்சி ரம்யா நான்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
வட்டாட்சியர் பிரபுவெங்கடேசன், நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ், கணக்காளர் அண்ணாமலை உள்பட வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.