FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மதுப்புட்டிகள் விற்பனை: பெண் கைது

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:06 am IST
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் மற்றும் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நெடுமானூா் கிராமத்தில் மதுப்புட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எலவனாசூா்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் சரஸ்வதி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சோதனை நடத்தினா். இதில், நெடுமானூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோ.மலா்(59) என்பவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் மற்றும் டாஸ்மாக் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து எலவனாசூா்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மலரைக் கைது செய்தனா். மேலும் அவா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 86 புகையிலைப் பாக்கெட்டுகள்,180 மில்லி லிட்டா் கொள்ளளவுக் கொண்ட 8 மதுப்புட்டிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments