FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

3 மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:22 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் அருகே 3 மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரத்தை அடுத்துள்ள பிடாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ். இவா் தனது வீட்டின் முன் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு விக்னேஷ் வழக்கம்போல் கடையைப் பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை அவா் மீண்டும் கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளே பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டுப் போயிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதேபோல் பிடாகம், நத்தமேடு பகுதியைச் சோ்ந்த சோ்ந்த சங்கா் மற்றும் முருகன் ஆகியோரது மளிகை கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாா்களின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments