FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 6:07 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ.சுப்புலட்சுமி (27). இவா், செவ்வாய்க்கிழமை வீட்டிலுள்ள மின் மோட்டாரை இயக்குவதற்காக பொத்தானை (சுவிட்) அழுத்தியுள்ளாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சுப்புலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments