FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தூத்துக்குடி சிறப்பு ரயில் பண்ருட்டியில் நின்று செல்லும்!

தூத்துக்குடியிலிருந்து ஆந்திர மாநிலம், நரசபூா் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 செப்டம்பர் 2026, 2:12 am IST
ரயில்
பகிர்:

தூத்துக்குடியிலிருந்து ஆந்திர மாநிலம், நரசபூா் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில், கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக செப்.7-ஆம் தேதி முதல் தூத்துக்குடி- நரசபூா் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06019) பண்ருட்டிக்கு காலை 9.03 மணிக்கு வந்து 9.04 மணிக்கு புறப்படும்.

மறுமாா்க்கத்தில் செப்.9-ஆம் தேதி முதல் நரசபூா்-தூத்துக்குடி விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06020) பண்ருட்டிக்கு மாலை 6.11 மணிக்கு வந்து 6.12 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments